Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு நகர்ப்புற சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023 – தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறை அமைப்பின் மூலமாக இங்கு துணை செவிலியர் பதவிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதாரத்துறை நிலை பதவிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2023

துணை செவிலியர் பதவிக்கான பணியிடம் தென்காசியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இதற்கு ஒரு காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள துணை செவிலியர் பதவிக்கு Training Course in multipurpose Health Worker என்ற படிப்பில் தேர்ச்சி பெற்ற நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த பதவிக்கு உங்களை நேர்காணல் மூலமாக தேர்வு செய்வார்கள். அதன் காரணமாக இதற்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது.

துணை செவிலியர் பதவிகளுக்கு மாத ஊதியமாக மாதந்தோறும் 14 ஆயிரம் வரை ஊதியம் தரப்படும். மேலும் பதவிகளைப் பொறுத்து இதற்கான சம்பள விகிதம் மாறு படும்.

மேலும் இந்த தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு பதவிக்கு 40 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வயது சம்பந்தப்பட்ட தகவலை கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதவிக்கு கீழே அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்ப தேதியில் முடிவதற்குள் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத்துறை வேலைகளை தென்காசி மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES